பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 60 பேர் பலி- 660 பேருக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 60 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் ஜனவரி மாதத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 60 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.
மேலும் 661 பேர் மேல் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications