ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எப்போதோ இந்தியாவில் தடை செய்தாகிவிட்டதே.. லோக்சபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதால் புதிதாக அதை தடை செய்ய வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் இன்று நடைபெற்ற தீவிரவாதம் தொடர்பான விவாதத்தின்போது பதிலளித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆதரவு கிடைக்கவில்லை. ஒரு சில இளைஞர்கள் மட்டுமே அந்த இயக்கத்தின் மீது பற்று வைத்துள்ளனர். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத பாதைக்கு சென்றுவிடாமல் போலீசார் தடுக்க வேண்டியதில்லை, அந்த இளைஞர்களின் பெற்றோரே தடுப்பார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் 33வது இடத்தில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளது. இந்த அமைப்பு 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட'த்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் வரும் அமைப்புகளை இந்தியா தனியாக தடை செய்ய வேண்டியதில்லை. ஐக்கிய நாடுகள் எந்த அமைப்பை தடை செய்கின்றனவோ அந்த அமைப்புகள் எல்லாம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலின்கீழ்தான் வரும்.
இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அனுதாபிகள் ஊடுருவதை தடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். அதன் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications