Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்.. அரை நிர்வாணம்.. இடுப்பில் சேலை கட்டி.. குஜராத்தில் அவமதிக்கப்பட்ட "தமிழ் வியாபாரி"

குஜராத்தில் தமிழ் வியாபாரியை அவமானப்படுத்தி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: தர வேண்டிய பணத்தை தரவில்லையாம்.. அதனால் ஒரு வியாபாரியின் இடுப்பில் சேலை கட்டி உள்ளனர்.. கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி உள்ளனர்.. அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.. அப்படியே தெரு தெருவா இழுத்து சென்றுள்ளனர் கொடூரர்கள்.. இவ்வளவும் நடந்தது நம் தமிழ்நாட்டு வியாபாரிக்குதான்..!

குஜராத் மாநிலம் சூரத்திற்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்றுள்ளார்.. அவருக்கு 55 வயதாகிறது.. ஜவுளிகளை அங்கே சூரத்தில் வாங்கி கொண்டு, இங்கே வந்து விற்பது அவரது வழக்கம்.

அப்படித்தான் நேற்று முன்தினமும் சென்றுள்ளார்... சூரத் முழுக்க துணிக்கடைகள்தான் என்பதால், பல்வேறு கடைகளுக்கு சென்று பர்சேஸில் ஈடுபட்டிருந்தார்..

வியாபாரி

வியாபாரி

அப்போது ஒருசிலர் அங்கு வந்து, சந்திரகாந்த் ஜெயின் அழைத்து வர சொன்னதாக வியாபாரியிடம் சொல்லி உள்ளனர்.. சந்திரகாந்த் ஜெயின் சூரத்தில் மிகப்பெரிய தொழிலதிபர். நியூ டிடி மார்க்கெட்டில் ஜவுளி கடை வைத்திருக்கிறார்.

 ஜெயின்

ஜெயின்

இதையடுத்து, வியாபாரியை, ஜெயின் கடைக்கு அவர்கள் அழைத்து சென்றனர்.. தமிழ் வியாபாரியை பார்த்ததுமே ஜெயின் கொந்தளித்துவிட்டார்.. ஜவுளி வாங்கிட்டு போன 4 லட்சம் ரூபாய் எங்கே? என்று கேட்டுள்ளார்... திடீரென பணத்தை கேட்கவும் தமிழ் வியாபாரி அதிர்ந்துள்ளார்.. இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லி உள்ளார்.

சேலை

சேலை


இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயின், சட்டையை கழட்டுமாறு வியாபாரியிடம் சொல்லி உள்ளார்.. அவரும் சட்டையை காட்டி இருக்கிறார்.. பிறகு தன் கடையில் இருந்து ஒரு சேலையை எடுத்து, வியாபாரியின் இடுப்பில் கட்டிவிட்டார்.. ஒரு போர்டையும் கழுத்தில் மாட்டி, தமிழ்வியாபாரியை தெரு தெருவாக இழுத்து சென்றுள்ளனர்.. ஜெயினின் கடையில் வேலை பார்த்த ஊழியர்களும் இதற்கு உடந்தை.

வீடியோ

வீடியோ

இந்த கொடுமையை அந்த மார்க்கெட்டில் நேரில் பார்த்தவர்கள், ஷாக் ஆகி, வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவிட்டு விட்டனர்.. அந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கு சென்றுள்ளது.. இதையடுத்து தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயின், அவரது கடை ஊழியர்கள் சிவா, சோகம் ஆகிய 3 பேரைம் கைது செய்துள்ளனர்.

 விசாரணை

விசாரணை

ஆனால் இவ்வளவு நடந்தும், தமிழ் வியாபாரி போலீசாரிடம் எதுவுமே சொல்லவில்லையாம்.. ஜெயினுக்கு எதிராக புகாரும் தரவில்லையாம்.. சாலபத்பூரா போலீசாரே நடந்ததையெல்லாம் அங்கிருந்தோரிடம் விசாரித்து, வீடியோ ஆதாரத்தையும் முன்வைத்து, தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. வடநாட்டில் தமிழ் வியாபாரியை அரைநிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+