Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு.. சுப்ரீம் கோர்ட்டில் ஆக. 30 முதல் இறுதி கட்ட 'மல்லுக்கட்டு'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதது தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டது.

Tamil Nadu government submitted additional documents for Jallikattu

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதனை ஏற்ற மத்திய அரசு ஜனவரி ஆண்டு 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.

போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடந்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த ஜுலை 27ம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் மீதான இறுதி விசாணை ஆகஸ்டு 30ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, உரிய விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+