தேசிய மொழி இந்தியை கற்றுக்கோங்க.. தமிழ்நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் சிஐஎஸ்எப் வீரர் அடாவடி
கோவா: கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயணியிடம், இந்தி தெரியாத காரணத்தால் கேலி செய்யும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரியாதா என கோபப்பட்டு பேசிய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இந்தி தேசிய மொழி என்றும் இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னையை சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர் (வயது 34) . கோவாவில் சுற்றுலா சென்றுவிட்டு தனது 3 வயது மகளுடன் சென்னை திரும்பிய ஷர்மிளா லக்கேஜ் தாபோலிம் விமானநிலையத்தில் செக் இன்-ற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த மத்திய தொழில்படை பாதுகாப்பு வீரர் மற்றொரு டிரேவை எடுக்குமாறு இந்தியில் கூறியுள்ளார். ஆனால், இந்தியில் கூறியதால் ஷர்மிளாவுக்கு புரியவில்லை.
பின்னர் சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் தனக்கு இந்தி தெரியாததால் நீங்கள் சொன்னது புரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே ஷர்மிளாவை கேலி செய்த பாதுகாப்பு படை வீரரோ, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வருவதாக ஷர்மிளா பதில் அளித்துள்ளார். உடனே குறுக்கிட்ட அவர், தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது.
இந்தி என்பது தேசிய மொழி, எனவே கண்டிப்பாக அதை கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். எனினும், இந்தி என்பது தேசிய மொழி கிடையாது. அலுவல் மொழி மட்டுமே என ஷர்மிளா கூறியுள்ளார். இது குறித்து ஷர்மிளா கூறுகையில், நான் நடத்தப்பட்ட விதம் மிகவும் மனிதாபிமானமற்றது மற்றும் கலாச்சார ரீதியாகவும் உணர்வுபூர்வமற்றது" என்று கூறியுள்ளார்.
கோவா விமான நிலையத்தில் தமிழக பெண்ணிடம் தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை கூறி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications