பலாத்கார முயற்சி வழக்கு: முன் ஜாமீன் கோரி டெஹல்கா தருண் தேஜ்பால் மனு!
Subscribe to Oneindia Tamil

டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பா, சக பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். கோவாவில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் லிப்டில் இருந்தபடியே அப்பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் தருண் தேஜ்பால் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவா மாநில போலீசார் தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் டெல்லி வந்து டெஹல்கா நிர்வாகத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இருப்பினும் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications