ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்- பயணிகளிடம் நகை அபேஸ்... ஓடி ஒளிந்த போலீஸ்
லக்னொ: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், உறங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்காமல் போலீஸ் ஓடி ஒளிந்து கொண்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது நேற்று நள்ளிரவு அங்குள்ள கியுல் ரயில் நிலையம் நோக்கி டாடா சாப்ரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. சிக்னலுக்காக ரயில் மெதுவாக சென்ற போது 15க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், நான்கு பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறினர்.

உறக்கத்தில் இருந்த பயணிகளை தட்டி எழுப்பினர். ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்தனர்.
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு தாமதமாக வந்த ரயில்வே போலீசார், 12 முறை துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் எந்த கொள்ளையனும் போலீசாரின் கையில் சிக்கவில்லை. நகை, பணத்துடன் தப்பிவிட்டனர்.
ஜமுய் மாவட்டத்தில் மட்டும் கடந்த வாரத்தில் இதுபோல மூன்று ரயில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications