நாய்க்குட்டியை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்
Recommended Video

டெல்லி: டெல்லியில் டாக்சி டிரைவர் ஒருவர் குடிபோதையில் நாய்க்குட்டியை பலாத்காரம் செய்ததில் அது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் நரேஷ் குமார்(34). டாக்சி டிரைவர். அவர் கடந்த 25ம் தேதி மது அருந்திவிட்டு நாய்க்குட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் காயம் அடைந்த நாய்க்குட்டிக்கு உதிரப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டது.

நரேஷ் தனது சகோதரரின் உதவியுடன் அந்த நாயக்குட்டியின் உடலை நரைனா பகுதியில் வீசிவிட்டார். நாய்க்குட்டி என்றும் பாராமல் தான் செய்த கொடூர செயல் பற்றி நரேஷ் தனது அக்கம்பக்கத்தினரிடம் பெருமையாக பேசியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நரைனா பகுதியில் இருந்து நாய்க்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நாய் பலாத்காரம் செய்யப்பட்டதால் உதிரப்போக்கு அதிகமாகி இறந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications