எம்.எல்.சி. தேர்தலில் லஞ்சம்: கைதான மற்றொரு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வுக்கு 14 நாள் ஜெயில்
ஹைதராபாத்: எம்.எல்.சி. தேர்தலில் லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட மற்றொரு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. சந்திரா வெங்கடா வீரய்யா 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில மேலவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நியமன எல்.எல்ஏ ஸ்டீபன்சனுக்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ ரேவந்த் ரெட்டி லஞ்சம் தரமுயன்றார் என குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அந்த நியமன எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்தார். இந்த புகாரையடுத்து, ரேவந்த் ரெட்டியையும் மேலும் இருவரையும் தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்து சிறையில் அடைத்தது.
அதன் பின்னர் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை ஆகினர். இந்நிலையில், கம்மம் மாவட்டம் சட்டுப்பள்ளி தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வான சந்திரா வெங்கடா வீரய்யா இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று ஊழல் தடுப்பு பிரிவு அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் முன் நேற்று ஆஜரான அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அவர் ஊழல் தடுப்பு தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வீரய்யாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் அவரை ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு வீரய்யாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் பின்னர் அவரை வரும் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications