‘குரு உத்சவ்’ என்பது ஒரு கட்டுரை போட்டி தான்: எதிர்ப்புகளைத் தொடர்ந்து இரானி பல்டி
டெல்லி: குரு உத்சவ் என்பது ஒரு கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு தான் என்றும், ஆசிரியர் தினத்தை அப்பெயரில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு நிர்ப்பந்திக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி.
வரும் வெள்ளிக்கிழமை, அதாவது செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தினத்தில் "குரு உத்சவ்" கொண்டாடப் பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் பட்டது.

ஏற்கனவே, மத்தியில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்னும் பெயரில் கொண்டாடப்படுவதற்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் பாமக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட இந்த விவகாரத்தை விமர்சித்தன.
இந்நிலையில், இன்று இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி. அதில் அவர், ‘குரு உத்ஸவ் என்பது ஒரு கட்டுரைப் போட்டி மட்டுமே' என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications