ஓபிஎஸ், மதுசூதனன் உயிருக்கு ஆபத்து! மத்திய படை பாதுகாப்பு தர கோரி ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தல்!!
ஓபிஎஸ், மதுசூதனன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மத்திய படை பாதுகாப்பு கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஓபிஎஸ் அணி எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஓபிஎஸ் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அதிமுக தலைமையகத்தில் கையை வைத்தால் ஓபிஎஸ்-க்கு கை இருக்காது என பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்தார் சசிகலா அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன். இதன் பின்னர் தேனி அருகே ஓபிஎஸ் வாகனம் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேபோல் ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் 11 எம்.எபிக்கள் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினர்.

மைத்ரேயன் தலைமையில் ஓபிஎஸ் அதிமுக எம்.பி.க்கள் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் மதுசூதன் உயிருக்கு ஆபத்து இருப்பதை விவரித்தனர். மேலும் இருவருக்கும் மத்திய படை பாதுகாப்பு தர வேண்டும் என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இன்றைய சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல்நலக் குறைவால் வரவில்லை என மைத்ரேயன் எம்.பி. விளக்கம் அளித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications