ஆந்திரா சட்டசபையில் தெலுங்கானா மசோதா தாக்கல்- மசோதாவுக்கு தீ வைத்து எரிப்பு!
ஹைதராபாத்: ஆந்திரா சட்டசபையில் உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே தெலுங்கானா வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உறுப்பினர்கள் கிழித்தும், தீ வைத்து எரித்தும் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி புதிய மாநில வரைவு மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கடந்த 5-ந்தேதி அனுப்பி வைத்தது.
பின்னர் இந்த மசோதாவை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றுவதற்காக, ஜனாதிபதி கடந்த 12-ந்தேதி அனுப்பி வைத்தார். இதை நிறைவேற்ற அடுத்த மாதம் 23-ந்தேதி வரை காலக்கெடுவும் அளிக்கப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு ஆந்திர சட்டசபை கூடியது. அப்போது சபாநாயகர் தெலுங்கானா வரைவு மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் சீமாந்திரா பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தெலுங்கானாவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
உடனே தெலுங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
எனினும் இந்த அமளிக்கு இடையே, 65 பக்க தெலுங்கானா வரைவு மசோதாவை சபாநாயகர் சபையில் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கு தேச உறுப்பினர் தேவிநேனி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், சபைக்குள்ளேயே அந்த மசோதா நகல்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் வெளியேறினர். அப்போது தெலுங்குதேசம் கட்சியின் சட்டமன்ற தலைவர் உமா மகேஸ்வர ராவ், மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். இதை டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர். அப்போது இரு கட்சியினரின் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த மோதலை தடுத்து நிறுத்தினர்.
இந்தநிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள், மசோதாவை கிழித்து அவற்றை தீ வைத்து எரித்தனர். இதை போலீசார் தடுக்க முயன்றும் முடியாததால் அவை எரிந்து சாம்பலானது. இந்த சம்பவங்களால் ஆந்திர சட்டசபை வளாகம் நேற்று போர்க்களம் போல காட்சியளித்தது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications