Telangana Exit Polls: கே.சி.ஆர் கனவை நொறுக்கிய காங்கிரஸ்.. பாஜகவுக்கு பின்னடைவு.. தெலுங்கானாவில் ஓங்குது "கை"
சென்னை: எதிர்பார்த்தது போலவே, ஆளும் பிஆர்எஸ்ஸை நொறுக்கி தள்ளிவிட்டு, மேலே வந்துள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது.
சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இன்று காலையிலிருந்து ஓட்டுப்பதிவு துவங்கியது.. அந்தவகையில் தெலுங்கானாவில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய, தேர்தல் முடிவுகளை, தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
கணிப்புகள்: அந்தவகையில், (ஜன் கி பாத்) JANKI BAAT என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 48 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளது.
அதேபோல, PTS (பிடிஎஸ்) நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 65 முதல் 68 இடங்களும், பிஆர்எஸ் 35 முதல் 40 இடங்களையும், பாஜக 7 முதல் 10 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 6 முதல் 7 இடங்களையும், மற்றவை 1 முதல் 2 இடங்களையும் கைப்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காங்கிரஸ்: அதுபோலவே, ARRAA என்ற செய்தி நிறுவனம் நடத்திய கணிப்பில், காங்கிரஸ் கட்சி 58 முதல் 67 இடங்களையும், பிஆர்எஸ் 41 முதல் 49 இடங்களையும், பாஜக 5 முதல் 7 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 முதல் 9 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிப்புகள் வெளிவந்துள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலேயே, காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி இருந்தன. இதை பார்த்து கேசிஆர் தரப்பு மிரண்டு போயிருந்தது. அந்தவகையில், இப்போது வந்துள்ள கணிப்புலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் மாநில கட்சியை அதிர வைத்து வருகிறது.
பாத யாத்திரை: இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸின் முனைப்பு, அதிகமாகவே தென்பட்டது.. ராகுல் காந்தியின் பாத யாத்திரை, இந்த யாத்தியையொட்டி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது, போன்றவைகளின் தாக்கம் தெலுங்கானாவில் ஏற்பட்டதையும் உணர முடிந்தது..
இதனால், காங்கிரஸின் செல்வாக்கும் தெலுங்கானாவில் சற்று அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.. அதனால்தான், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மாஜிக்கள் முதல் எம்எல்ஏக்கள்வரை காங்கிரஸை தேடி வந்து இணைந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு பலன் தற்போது கிடைத்துவிட்டது போலவே இருக்கிறது.
படுகுஷி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, படுகுஷியில் இப்போது இருக்கிறார். ,இதெல்லாம் ஒரு கணிப்புகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதுதான், உண்மை நிலவரம் தெரியவரும்.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications