தெலுங்கானா விவகாரம்: 'பெப்பர் ஸ்ப்ரே' எம்.பி. ராஜகோபால் அரசியலுக்கு முழுக்கு
ஹைதராபாத்: நாடாளுமன்றத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்திய விஜயவாடா எம்.பி. லகடபாதி ராஜகோபால் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா எம்.பி.யாக இருந்தவர் லகடபாதி ராஜகோபால். அவர் ஆந்திராவை பிரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்நிலையில் நேற்று லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ராஜகோபால் உள்ளிட்ட எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திராவை பிரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து ராஜகோபால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தான் அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தெலுங்கு பேசும் மக்களை பிரித்ததில் நான் வேதனை அடைந்துள்ளேன். இது ஒரு துக்க தினம். எனக்கு அரசியலில் இருந்த ஆர்வம் போய்விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications