மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- சீமாந்திரா காங். எம்.பி.க்கள் நோட்டீஸ்!!
டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் சீமாந்திரா காங்கிரஸ் எம்.பிக்களே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மனம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இதர கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா.
இந்நிலையில் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அக்கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 10 மாவட்டங்களுடன் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்த விவகாரம் தொடர்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
சீமாந்திரா காங்கிரஸ் எம்.பி.க்களான எல். ராஜகோபால், எஸ்.பி.ஒய். ரெட்டி, சாப்பம் ஹரி, ஆர். சாம்போசிவராஜ், ஹர்ஷாகுமார் மற்றும் வி. அருண் குமார் ஆகியோர் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளனர்.
அத்துடன் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து சீமாந்திரா காங். எம்.பி.க்களும் வெளியேற திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications