ஜூன் 2ல் உதயமாகிறது புதிய மாநிலம் ‘தெலங்கானா’: மத்திய அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வரும் ஜூன் 2 ஆம் தேதி நாட்டின் 29 மாநிலமாக தெலங்கானா உதயமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய மாநிலமான தெலுங்கானா குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Telangana state will be born on June 2

கடந்த மாதம் தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 10 மாவட்டங்களைக் கொண்ட தெலங்கானா தனி மாநிலமாகவும், 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆந்திர மாநிலமாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.

ஆனால், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஹைதராபாத் 10 ஆண்டுகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீமாந்திரா பகுதிக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வரும் 2ம் தேதி முதல் உதயமாவதாகவும், அன்றைய தினத்தில் இருந்தே அம்மாநிலம் தனி மாநிலமாக செயல் பட ஆரம்பிக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

ஆந்திராவை இரு மாநிலங்களாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தற்போது அங்கு தற்போது அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+