தெலுங்கானாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு வரி! பேருந்துக்கட்டணம் உயர வாய்ப்பு!!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஏப்ரல் 1ஆம் தேதி முதல், ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் நுழைவு வரி விதிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான சரக்கு வாகன வாடகை மட்டுமல்லாது பேருந்து போக்குவரத்தும் கடுமையாக உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு முன்பு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் கூறுகையில், மார்ச 31ஆம்தேதி வரை நுழைவு வரி விதிக்கப்படாது என்று கூறியிருந்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

Telangana to tax vehicles from Andhra, state to reciprocate. Who benefits, suffers?

இதையடுத்து நாளை முதல் வரி விதிக்கப்படவுள்ளது.

அதேசமயம் ஹைதரபாத் நகரானது, 10 வருடத்திற்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்பதால் ஹைதராபாத்துக்குள் நுழைந்தாலும் வரி விதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, விஜயவாடா - ஹைதராபாத் இடையிலான பஸ் கட்டணம் ரூ 600லிலிருந்து ரூ. 1000 ஆக உயரப் போகிறதாம். தற்போது தமிழகம், கர்நாடகத்திலிருந்து தெலுங்கானா செல்ல வேண்டிய வாகனங்கள் ஆந்திரா மூலமாகத்தான் போக வேண்டும். எனவே ஆந்திராவும் வரி விதிக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+