Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதைப் பொருள் கடத்தல்: தெலுங்கு இளம் நடிகர், நைஜீரியர் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதி அருகே அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 கிராம் கொக்கைன் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Telugu actor, Nigerian national held for drug trafficking

பிசினஸ் விசாவில் இந்தியா வந்த ரோதிமி டெல்லியில் உள்ள சூடானைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி அதை பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் விற்று வந்துள்ளார்.

Telugu actor, Nigerian national held for drug trafficking

அவர் ஒரு கிராம் போதைப் பொருளை ரூ.1,500க்கு வாங்கி அதை ரூ. 3 ஆயிரத்திற்கு அதாவது இரட்டிப்பு விலைக்கு விற்று வந்துள்ளார். அவர் உதய் கிரணை சந்தித்து அவருக்கு போதைப் பொருளை வினியோகித்து வந்துள்ளார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உதய் கிரண் பராரே, ரக்ஷகுலு, யுவராஜ்யம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+