சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம்

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கான திட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லை எனக் கூறி ஆந்திர எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Telungu desam MP Naramalli Sivaprasath dressed up like Narathar

மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைப்பதாக கூறி ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆதரவை திரும்ப பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய போராட்டத்தில் நரமல்லி சிவபிரசாத் எம்பி நாரதமுனி போல் உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக, பெண், கால்நடை மேய்ப்பவர் மற்றும் பள்ளிச்சிறுவன் போல உடையணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+