கேரளாவில் கொல்லப்பட்ட முஸ்லீம் வாலிபருக்காக சிவன் கோவிலில் பூஜை நிறுத்தம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பட்டப்பகலில் நடுத்தெருவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சபீருக்காக சிவன் கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அருகே உள்ள பத்தெனடா என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலின் அறங்காவலர்கள் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர் சபீர்(23). அந்த கிராம மக்கள் மத வேறுபாடு இன்றி கோவில் விழாக்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.

வரும் 9ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் அந்த சிவன் கோவிலில் திருவிழா நடக்க இருந்தது. திருவிழாவின்போது பக்தர்கள் யானையின் வாலை பிடித்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சி நடத்தப்படும். இது குறித்து சிவன் கோவில் நிர்வாகத்தினருக்கும் மற்றொரு கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பைக்கில் சென்ற சபீரை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து சபீரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் போராட்டம் நடத்தினர். சபீரின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
சபீர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் திருவிழாவின்போது வழக்கமாக நடத்தப்படும் அன்னதான நிகழ்ச்சியை கிராம மக்கள் ரத்து செய்துள்ளனர். சபீருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் சிவன் கோவிலில் பூஜை நடத்தப்படவில்லை, கோவில் மணி கூட ஒலிக்கவில்லை.
வழக்கமாக அந்த கோவிலில் தினமும் 5 வேளை பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் திருவிழாவை நடத்த சபீர் ஏற்பாடு செய்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை குடும்பத்தை தவிக்க விட்டு தனியாக சென்ற பிறகு சபீரின் குடும்பத்தார் வறுமையில் வாடியுள்ளனர். அவருக்கு தாயும், 2 சகோதரிகளும் உள்ளனர். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய சபீர் கட்டிட வேலை செய்து தனது சகோதரிகளை படிக்க வைத்துள்ளார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications