தேவயானி விவகாரத்தில் பதிலடி: அமெரிக்க துணை தூதர் வெளியேற இந்தியா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விசா மோசடி வழக்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவிலுள்ள அமெரிக்க துணைத் தூதர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து பணிப்பெண் குடும்பத்தாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது உள்பட தேவயானிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அந்த அதிகாரி முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேற 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications