Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அராஜகம்.. திடீர்னு அரசு பள்ளியில் புகுந்து 2 ஆசிரியர்களை சுட்டுகொன்ற தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில்

அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 2 நாளைக்கு முன்பும் இப்படித்தான் ஒரு கொடூரம் நடந்தது.

ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவர் பல வருடங்களாகவே மருந்து கடை நடத்தி வந்தார்... இவருக்கு 70 வயதாகிறது..

மர்மநபர்

மர்மநபர்

இவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.. இவரை கொன்றது அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.. காரணம், 1990களில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது, தன்னுடைய மருந்து கடையை மூடாமல் பொது மக்களுக்காக சேவை செய்தவர்தான் இந்த பிந்த்ரூ என்பவர். அந்த ஆத்திரத்தில்தான், இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

 தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

அதேபோல, ஸ்ரீநகர் லால் பஜார் பகுதியில் தெருவோர பானிபூரி கடைக்காரர் ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்... அவர் பெயர் வீரேந்திர பஸ்வான்.. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்தவர். இதற்கடுத்ததாக, பந்திப்பூராவில் முகமது ஷாஃபி என்ற கார் டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.. ஒரு மணி நேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுன்று கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

 கண்டனம்

கண்டனம்

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்... உடனடியாக, காஷ்மீரில் தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது.. ஆனால், இன்று காலை மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கு நடந்துள்ளது.

கூட்டம்

கூட்டம்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.. இந்த தகவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்... ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு இன்று காலை தலைமை ஆசிரியர் ரூமில் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குள் திடீரென 2 தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர்.. அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர், மற்றொரு ஆசிரியர் தீபக் ஆகியோரை ரூமுக்கு வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள்..

 ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்


என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல், யாருமே எதிர்பார்க்காதவகையில், 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த 2 பேரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் தீவிர சிகிச்சை தந்தும பலனளிக்காமல் 2 பேருமே பரிதாபமாக பலியாகினர். அடுத்தடுத்து அப்பாவி மக்கள் அங்கு கொல்லப்பட்டு வருவது பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+