தீவிரவாதிகள் என்பதா? நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவி கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவியை கொளுத்தி போராட்டம் நடத்தினர் பஞ்சாப் விவசாயிகள்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் எழுச்சிமிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டங்களால் அரசியல் கட்சிகள் மிரண்டு போயுள்ளன.

ஒவ்வொருநாளும் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் ஊர்வலங்கள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீப காலமாக பாஜகவை ஆதரிக்கும் நடிகை கங்கனா ரனாவத், போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்திருந்தார்.

கங்கனா ரனாவத்தின் இந்த கருத்து விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் கங்கனா ரனாவத்தின் கொடும்பாவிகளை விவசாயிகள் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications