நுபுர் சர்மாவை கொலை செய்ய தீவிரவாதி சதித்திட்டம்? நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய உ.பி போலீஸ்
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது நியமித்த தீவிரவாதியை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அரபு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, முகமது நபி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு பல தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன. அவரை கொலை செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சில தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரரையும் தீவிரவாதிகள் அண்மையில் கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளியிட்டனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது நடீம் என்பவரை அம்மாநில தீவிரவாத ஒழிப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரிக்-இ-தலிபான் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் நடீமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், தற்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உத்தரவின் பேரிலேயே நுபுர் சர்மாவை கொலை செய்ய தான் திட்டமிட்டதாக முகமது நடீம் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முகமது நடீமை ஏடிஎஸ் அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஏடிஎஸ் படையினருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
-
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
வளைகுடாவில் மூக்கை நுழைக்கும் ஷெரீப்.. சவுதி பாகிஸ்தான் டீல் என்ன! உலக போர் வெடிக்கும் ஆபத்து -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications