நுபுர் சர்மாவை கொலை செய்ய தீவிரவாதி சதித்திட்டம்? நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய உ.பி போலீஸ்
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது நியமித்த தீவிரவாதியை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அரபு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, முகமது நபி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு பல தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன. அவரை கொலை செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சில தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரரையும் தீவிரவாதிகள் அண்மையில் கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளியிட்டனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது நடீம் என்பவரை அம்மாநில தீவிரவாத ஒழிப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரிக்-இ-தலிபான் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் நடீமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், தற்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உத்தரவின் பேரிலேயே நுபுர் சர்மாவை கொலை செய்ய தான் திட்டமிட்டதாக முகமது நடீம் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முகமது நடீமை ஏடிஎஸ் அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஏடிஎஸ் படையினருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications