For Daily Alerts
Just In
2012-14ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 171 ராணுவத்தினர் பலி: பாதுகாப்புத் துறை அமைச்சர்
டெல்லி: 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பயங்கரவாதிகளுடனான மோதலில் மொத்தம் 171 ராணுவத்தினர் பலியாகி உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்த பதில்:
2012ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடனான மோதலில் 61 ராணுவத்தினர் பலியாகினர். 2013ஆம் ஆண்டில் 54; 2014ஆம் ஆண்டில் 56 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு உரிய விதிகளின் படி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ரூ50 லட்சமும் இளநிலை அதிகாரிகளுக்கு ரூ25 லட்சமும் ராணுவ வீரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
Comments
defence minister manohar parrikar terrorists soldiers பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் பலி
English summary
A total of 171 soldiers were killed while fighting terrorists in 2012-14, Defence Minister Manohar Parrikar said on Tuesday.
Story first published: Tuesday, August 4, 2015, 21:13 [IST]