ஜம்மு காஷ்மீரத்தில் தீவிரவாதிகள் நடத்தியது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது கட்டமாக டிசம்பர் 9ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் மட்வாரில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாரம் செய்தார்.

Terrorists tried to attack Indian democracy: PM Modi

அப்போது ஜம்மு காஷ்மீரத் தாக்குதலை சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, இந்திய ஜனநாயகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த ஜார்கண்ட் வீரர் சங்கல்ப் குமார் சுக்லாவின் தியாகம் போற்றுதலுக்குரியது. பயங்கரவாதிகள் இந்தியாவின் ஜனநாயகத்தை சிதைக்க முயல்கிறார்கள் என்றார்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+