இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டதன் பின்னணியில் பாக். ராணுவம் இருந்தது அம்பலம்!
இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகள் விட்டுச்சென்ற கருவியை ஆய்வு செய்த பாதுகாப்புப் படையினர் இதனை உறுத
ஸ்ரீநகர் : இந்திய ராணுவ வீரர் பிரபு சிங் என்பவர் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற இரவு நேரத்தில் துல்லியமாக பார்க்கும் கருவி பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்துவது என தெரியவந்துள்ளது.
ஜம்மூ-காஷ்மீரின் மச்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் 3 வீரர்களை சுட்டுக்கொன்றனர்.மேலும் பிரபு சிங் என்பவரின் தலையையும் அவர்கள் துண்டித்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இது பாகிஸ்தான் அரசின் ஆதரவுடனே நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற பொருட்களை கைப்பற்றிய ராணுவம் அதனை ஆய்வுக்கு அனுப்பியது. அதில் நைட் விஷன் எனும் இருட்டிலும் வழியை துல்லியமாக காணும் ஒற்றைக் கண் கண்ணாடி இருப்பது தெரியவந்தது. இது அமெரிக்க அரசால் தயாரிக்கப்பட்டது என்பதும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதனை அமெரிக்கா வழங்கியதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் கருவிகள், தீவிரவாதிகளிடம் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். நைட் விஷன் கருவி மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாகிஸ்தான் படையினர் பயன்படுத்தும் பைகளையும் தீவிவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் பொருட்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவது இது முதல்முறையல்ல என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பல முறை தீவிரவாதிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தப் பொருட்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதி செய்வது மீண்டும் அம்பலமாகியுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications