குருதாஸ்பூர் தாக்குதலுக்கு காரணம் பாக். தீவிரவாதிகள் - அடித்துக் கூறும் ராஜ்நாத்சிங்; மறுக்கும் பாகி
சண்டிகர்: பஞ்சாபில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கூற்றை மறுத்துள்ளது பாகிஸ்தான்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினா நகரில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவரும் அன்றைய தினமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்த அவர், ராவி ஆறு வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முயன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அரசு எப்போதும் உறுதிபூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய வீரர்கள் எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள். இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை யார் குலைக்க முயன்றாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் குர்தாஸ்பூர் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ''பஞ்சாப்பில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. பாகிஸ்தானும் தீவிரவாத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இந்திய ஊடகங்கள் எங்கள் நாட்டின் மீது குற்றம்சாட்டுவது துரதிருஷ்டவசமானது. தீவிரவாதத்தை அனைவரது பொதுவான எதிரியாகவே பார்த்து வருகிறோம். விசாரணை எதுவும் செய்யாமல் பிறர் மீது குற்றம் சுமத்துவது ஆரோக்கியமான போக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications