For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகன், மகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூர தந்தை

By Siva
Google Oneindia Tamil News

தானே: மகாராஷ்டிராவில் பெற்ற மகன் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் அசோக் சிங்(32). சிவில் கான்டிராக்டர். அவருக்கு திருமணமாகி 13 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். அசோக் கடந்த 2 ஆண்டுகளாக தனது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட மனைவியை மிரட்டியுள்ளார்.

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தான் செய்வேன், இதை யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்று அசோக் தனது மனைவியை மிரட்டி வைத்துள்ளார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் இறுதியில் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது இயற்கைக்கு புறம்பாக உறவு கொண்டது உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

English summary
Thane police arrested a civil contractor who sexually abused his minor son and daughter for the last two years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X