மகாராஷ்டிராவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி லிபியாவில் கைது
மகராஷ்ட்ரா மாநிலம் தானேவைச் சேரந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி தாம்பே லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: தானேவைச் சேர்ந்த தாப்ரேஷ் முகமது தாம்பே என்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியும், அலி என்பவரும் லிபியாவில் உள்ள அமலாகக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் நீ தவறான இடத்தில் சேர்ந்துள்ளாய் திரும்பி வந்துவிடு என்று எச்சரித்துள்ளனர்.

அதனை பொருட்படுத்தாத தாம்பே தான் சரியான இடத்தில்தான் இருப்பதாகவும், இங்கு சிறப்பான வாழ்க்கை அமைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவரது சகோதரர் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், லிபியாவில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் தாம்பேவையும் அவருடன் இருந்த அலி என்பவரையும் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications