17 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரைக் கண்டுபிடித்துக் கொடுத்த ‘கூகுள்’... தேங்க்ஸ் சொல்லும் மகள்!
பாட்னா: கூகுள் தேடல் மூலமாக சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்துள்ளார் அசாம் பெண் ஒருவர்.
நிஜவாழ்க்கையிலிருந்து தான் பெரும்பாலான சினிமாவிற்கான கதைக்கருக்கள் கிடைக்கின்றன. ஆனால், சில சமயங்களில் நிஜ வாழ்க்கையில் நடப்பவை சினிமாவையும் மிஞ்சி விடுவதுண்டு. அப்படித் தான் அசாமில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பீகார், பரவ்னி ரயில் நிலையத்தில் ஆறு வயது குழந்தையாக இருந்த போது எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தைப் பிரிந்தார்.
கடந்த 1997ம் ஆண்டு தனது மாமாவுடன் குடியா என்ற சிறுமி தனது பாட்டியைக் காண ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரவ்னி ரயில் நிலையத்தில் சில பொருட்கள் வாங்குவதற்காக இறங்கிய குடியாவின் மாமாவால் மீண்டும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.
மாமாவைக் காணாமல் அழுத குடியாவை ரயில்வே போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தனது பெற்றோரைப் பற்றி குடியாவால் தெளிவான தகவல்களைக் கூறாததால் அவரது பெற்றோரைப் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
பாட்னா ரயில்வே கிராஸிங்கிற்கு அருகே உள்ள பிஸ்கட் கம்பெனியில் அவரது மாமா வேலை பார்ப்பதாகவும், அதற்கு அருகிலேயே அவரது இல்லம் இருந்ததாகவும் மட்டும் குடியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அசாம் அதிகாரி ஒருவர் வசம் சேர்ந்தார் குடியா. பின்னர் அங்கேயே வளர்ந்துள்ளார். குடியாவின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதில் நீலக்சி சர்மா என்ற அந்த அதிகாரி தீவிர முயற்சி எடுத்து வந்துள்ளார்.
எவ்வளவோ முறை நேரில் சென்றும் இந்த 17 ஆண்டுகளில் குடியாவின் வீட்டை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுளில் இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார் நீலக்சி. அப்போது அந்த பிஸ்கட் கம்பெனியின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது.
அதன் மூலம், குடியாவின் மாமாவைக் கண்டுபிடித்தார் நீலக்சி. பின்னர் அவர் மூலமாக குடியாவை அவரது குடும்பத்துடன் இணைத்து விட்டார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளை மீண்டும் பார்த்த அவளது பெற்றோர், குடியாவை வாரி அணைத்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நீலக்சி.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications