கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகளை கட்டும் ஆந்திரா.. தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைக்கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது.
சித்தூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைக்கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. சித்தூர் சீதலகுப்பத்தில் ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் ஆந்திர அரசு அணை கட்டுகிறது.
கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.

சித்தூர் சீதலகுப்பத்தில் தடுப்பணைக்கான கட்டுமான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளுக்காக மணல், ஜல்லி கற்கள் போன்றவற்றையும் அம்மாநில அரசு கொட்டி வைத்துள்ளது.
ஆந்திர அரசு தடுப்பணைக் கட்ட தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திரா அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் வரத்து பாதிக்கப்படும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர அரசைக் கண்டித்து சித்தூர் சீதலகுப்பத்தில் தமிழக விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications