கெஜ்ரிவாலிடம் 500 ரூவாவும், ஓட்டை ஜீப்பும் மட்டும் இல்லை: கோடிக்கணக்கில் சொத்தும் உள்ளது
வாரனாசி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் சொல்வது போன்று ஓட்டாண்டி இல்லை மாறாக கோடீஸ்வரர் ஆவார்.
ஆத் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாரனாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஜீப்பில் வந்த அவர் தன்னிடம் பாக்கெட்டில் ரூ. 500ம், இந்த ஓட்டை ஜீப்பும் தான் உள்ளது என்று மக்களிடம் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் அவர் ஒரு கோடீஸ்வரர். வேட்புமனுவில் அவர் தெரிவித்துள்ள சொத்து விவரத்தை பார்ப்போம்.
வங்கி
கெஜ்ரிவாலின் பெயரில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்து 85 ரொக்கம் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ. 17 லட்சத்து 41 ஆயிரத்து 583 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.
அசையா சொத்துக்கள்
கெஜ்ரிவாலின் பெயரில் ரூ.92 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவி சுனிதா பெயரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன.
பணமே இல்லை
கோடிக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு தன்னிடம் தேர்தல் பலப்பரீட்சை நடத்த கூட பணம் இல்லை என்று கெஜ்ரிவால் மக்களிடம் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளார்.
ஏழை
கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக் கொண்டு கெஜ்ரிவால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.