பாக். தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி.. தீவிர கண்காணிப்பில் காஷ்மீர்.. உளவுத்துறை பகீர் தகவல்!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 12 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இரண்டாவது முறையாக தீவிரவாதிகளின் ஊடுருவல் நேற்று முறியடிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் தாக்குதல்
இதுவரை மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 .ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதல்
இதுவரை மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 .ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் 7ஆம் தேதி இரவு பாகிஸ்தான் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஊடுருவல் முறியடிப்பு
கடந்த 48 மணி நேரத்தில் குரேஷ், மச்சில், நவ்காம் மற்றும் உரி செக்டார் பகுதிகளில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் உரி செக்டார் மற்றும் குரேஷ் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறை எச்சரிக்கை
இதனிடையே எல்லைப் பகுதியில் ஏராளமான தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications