கி.பி.1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகை உலுக்கிய நிலநடுக்கங்கள்..
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாளத்தில் மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த உயிர்சேதமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1900ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான கோர நிலநடுக்கங்கள்..

- 1906 ஜனவரி 31: ஈகுவடாரில் 8.8. ரிக்டரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் 500 பேர் உயிரிழந்தனர்.
- 1922 நவம்பர் 11: சிலி-அர்ஜென்டினா எல்லையில் ஏற்பட்ட நிலம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. ரிக்டரில் 8.5 அலகுகளாக பதிவாகி இருந்தது.
- 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 3: ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 8.5 அலகாக இருந்தது.
- 1934 ஆம் ஆண்டு: பீகார்-நேபாள் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர்.
- 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 1: இந்தோனேசியாவின் பாண்டா கடலில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 8.5 அலகுகளாக பதிவாகி இருந்தது.
- 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 750 பேரை பலி கொண்டது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 8.6 ஆக இருந்தது.
- 1952ஆம் ஆண்டு நவம்பர் 4: ரஷ்யாவில் ஏற்பட்ட நிலக்கம் மிகவும் மோசமானதாக இருந்தது. ரிக்டரில் 9.0 அளவுக்கு நிலநடுக்கம் இருந்தது. இதனால் ஹவாயில் சுனாமி அலைகள் 30 அடி உயரத்துக்கு எழுந்தன.
- 1957ஆம் ஆண்டு மார்ச் 9: அலாஸ்காவில் 8.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1960 ஆம் ஆண்டு மே 22: ரிக்டரில் 9.5 அளவுக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் சிலியில் ஏற்பட்டது. இது உருவாக்கிய சுனாமி 1716 பேரை பலி கொண்டது.
- 1963ஆம் ஆண்டு அக்டோபர் 13: குரில் தீவுகளில் 8.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1964ஆம் ஆண்டு மார்ச் 28: அலாஸ்காவில் 9.2 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடலில் 9.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பலியாகினர்.
- 2005ஆம் ஆண்டு மார்ச் 28: சுமத்ரா தீவுகளில் 8.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு 1,300 பேர் பலியாகினர்.
- 2011ஆம் ஆண்டு மார்ச் 11: ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் 9.0 ஆக இருந்தது. சுமார் 18 ஆயிரம் பேர் பலியானார்கள்.
- 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 11: சுமத்ரா தீவுகளில் 8.6 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications