Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட 'அந்த சம்பவம்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கியுளளார்.

கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 25 வயது பெண் உபேர் டாக்சியில் வைத்து அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரின் வாழ்வு மாறிவிட்டது. வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரின் தந்தை வேலையை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்துவிட்டார். அந்த பெண்ணின் தாயோ இரவு முழுவதும் தனது மகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த பெண்ணோ தனது அறையில் உபேர் பலாத்கார வழக்கு, உபேர் பலாத்காரம், உபேர் டாக்சி பலாத்காரம், உபேர் டாக்சி பலாத்கார வழக்கு விசாரணை, டெல்லி, பெண்கள் பாதுகாப்பு, டெல்லி பெண்கள் பாதுகாப்பு, டெல்லி செய்திகள் என்று சிறு சிறு தாள்களில் எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.

அந்த பெண்ணின் தாய் கூறுகையில்,

என் கணவர் டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பரம்பரை சொத்தான இந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டினோம். நான் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். 1988ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. ஓராண்டு கழித்து எங்கள் மகள் பிறந்தாள். பிறப்பது ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை போதும் என்று என் கணவர் தெரிவித்துவிட்டார். என் மகள் பிறந்த உடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, பார்ட்டி கொடுத்து கொண்டாடினோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+