கார்கில் போன்ற சூழல் எதுவும் இல்லை.. ராணுவத் தளபதி
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், கேரன் பகுதியில் கார்கில் ஆக்கிரமிப்பு நிகழ்வு போல எந்தச் சூழலும் தற்போது இல்லை. இந்தியப் பகுதி எதுவும் பாகிஸ்தானியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எந்த பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அதையும், இதையும் ஒப்பிட முடியாது. கேரன் சம்பவம் ஒரு தீவிரவாத ஊடுறுவல்தான்.
கேரன் பகுதியில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் 11 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கார்கில் ஆக்கிரமிக்கப்பட்டது போல் தற்போது கேரன் பகுதியில் எந்த இந்திய கிராமமும் ஆக்கிரமிக்கப்படவில்லை. ஊடுருவிய தீவிரவாதிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.
குப்வாரா மாவட்டத்தின் வழியாக இவர்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்றனர். இதைப் பார்த்த ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி்த் தொடர்பாளர் தெரிவித்தார்.
கேரன் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுறுவலை தொடங்கினர். அன்று முதல் ராணுவத்தினர் அவர்களை விரட்டியடிக்க போராடி வருகின்றனர். இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஊடுறுவலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு் தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் தற்போது வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications