கார்கில் போன்ற சூழல் எதுவும் இல்லை.. ராணுவத் தளபதி
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், கேரன் பகுதியில் கார்கில் ஆக்கிரமிப்பு நிகழ்வு போல எந்தச் சூழலும் தற்போது இல்லை. இந்தியப் பகுதி எதுவும் பாகிஸ்தானியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எந்த பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அதையும், இதையும் ஒப்பிட முடியாது. கேரன் சம்பவம் ஒரு தீவிரவாத ஊடுறுவல்தான்.
கேரன் பகுதியில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் 11 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கார்கில் ஆக்கிரமிக்கப்பட்டது போல் தற்போது கேரன் பகுதியில் எந்த இந்திய கிராமமும் ஆக்கிரமிக்கப்படவில்லை. ஊடுருவிய தீவிரவாதிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.
குப்வாரா மாவட்டத்தின் வழியாக இவர்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்றனர். இதைப் பார்த்த ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி்த் தொடர்பாளர் தெரிவித்தார்.
கேரன் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுறுவலை தொடங்கினர். அன்று முதல் ராணுவத்தினர் அவர்களை விரட்டியடிக்க போராடி வருகின்றனர். இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஊடுறுவலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு் தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் தற்போது வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications