தன்னை பார்த்து சுயஇன்பம் அனுபவித்தவரை போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்ட பெண் எழுத்தாளர்
மும்பை: மும்பையில் தன்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்த நபரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார் ஒரு பெண் எழுத்தாளர்.
மும்பையில் வசித்து வருபவர் மரியானா அப்டோ. எழுத்தாளரான அவர் திங்கட்கிழமை வெளியே சென்றுள்ளார். அப்போது ஒருவர் மரியானாவை பார்த்துக் கொண்டே பொது இடம் என்று கூட பார்க்காமல் சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.
@MaryAbdo Noted.CM @Dev_Fadnavis has directed Joint CP Deven Bharti to look into it.Please follow us so that we will DM you contact details.
— CMO Maharashtra (@CMOMaharashtra) August 17, 2015 மரியானாவை பார்த்து அந்த நபர் செய்த காரியத்தை பார்த்த சிலர் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் மரியானா அந்த நபரின் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு தெரிவித்திருந்தார்.
மரியானாவின் ட்வீட்டை பார்த்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதவாது,
Remarkable @CMOMaharashtra @Dev_Fadnavis @MaryAbdo pic.twitter.com/cuAg3Dw63A
— Ankita Thakur (@Ankitaaa_) August 18, 2015 @MaryAbdo கண்டுகொண்டுள்ளோம். முதல்வர் இது குறித்து விசாரணை நடத்துமாறு துணை சி.பி. தேவன் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களை ஃபாலோ செய்தால் டி.எம். மூலம் தகவல் அனுப்புவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியானா அந்த நபரின் புகைப்படத்துடன் போட்ட ட்வீட்டை பின்னர் அழித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications