புகுந்த வீட்டுக்கு வர அடம்பிடித்த மணப்பெண்.. பொறுத்து பொறுத்து அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை
டெல்லி: திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு வருவதற்கு அடம் பிடித்த புதுப்பெண்ணை மாப்பிள்ளை ஒருவர் தூக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பின்னர் பெண்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும். அவ்வாறு செல்வதற்கு முன்னர் புதுப்பெண் தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கட்டி அணைத்து அழுவார்.

பின்னர் அவர்களும் மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானப்படுத்தி அழைத்து செல்வர். இன்னும் காதல் திருமணம் செய்து கொண்ட வீடுகளில் சில பெண்கள் கண்ணீர் விடுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான்.
எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக பணக்கார இடங்களில் பெண் வீட்டோட மாப்பிள்ளையாக சில ஆண்கள் வருவதுண்டு. இந்த நிலையில் பேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் போது வட இந்தியாவில் செய்யப்படும் திருமணம் போல் உள்ளது.
புகுந்த வீட்டுக்கு புறப்படும் மணப்பெண் தனது சொந்தங்களை பார்த்து அழுகிறார். அவரை தேற்றி போய் வருமாறு கூறியும் அந்த பெண் போகாமல் அங்கேயே நிற்கிறார். இதையடுத்து மணமகனோ அந்த பெண்ணை அலோக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்படுகிறது.












Click it and Unblock the Notifications