ம.பி.யில் 1,000 கிலோ வெடிபொருட்கள், 132 டெடோனேட்டர்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சாகர்: மத்திய பிரதேசத்தில் 3 பேரிடம் இருந்து 1000 கிலோ வெடி பொருட்கள், 132 டெடோனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட 3 பேரிடம் வெடிபொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இகையடுத்து போலீசார் நேற்று அந்த 3 பேர் இருந்த வீட்டிற்கு சென்றனர்.

அந்த வீட்டில் இருந்து 1000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 132 டெடோனேட்டர்கள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஒரே இடத்தில் இவ்வளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே இந்தியாவில் தாக்குதல் நடத்த பல்வேறு தீவிரவாத அமைப்புகள் திட்டம் தீட்டி வரும் நிலையில் இவ்வளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications