For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் 3 வயது சிறுமி பலாத்காரம் – மரக்கட்டையை 'திணித்த' கொடூர காமுகர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 3 வயதான சிறுமி ஒருவர் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்கு போராடி வருகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தென்பகுதியான சரோஜினி நகர் பகுதியில் உள்ள சேரி பகுதியான பிலஞ்சி கிராமம் மத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் சிறுமியை காணவில்லை. இதைதொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

Three-Year-Old Girl Raped in Delhi, in Critical Condition

திடீரென்று ஓரிடத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு உள்ள காலிமனை பிரிவு அருகே சிறுமி ரத்தம் தோய்ந்த நிலையில் அழுதபடி இருந்தால் உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

பெற்றோர்களும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக சிறுமியை சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளித்து வருகின்ற மருத்துவர்கள் கொடுத்த தகவலின்படி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவரது அந்தரங்க பாகத்தில் மரப் பொருள் ஒன்றையும் அக்கொடியவர்கள் திணித்துள்ளனர். கும்பலாக இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி தற்போது உயிருக்காக போராடி வருகிறார். சிறுமியை பலாத்காரம் செய்ததாக 22 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
A three-year-old girl was raped and a wooden object inserted into her private parts by unidentified assailants here in the national capital, police said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X