அவதூறு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய பிரேமலதா மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: அவதூறு வழக்கு ஒன்றின் ஜாமீன் நிபந்தனைகளில் தனக்கு விலக்கு அளிக்கக் கோரி தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, திருப்பூரில் மக்கள் நலக் கூட்டணி நடத்திய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். அப்போது அவர், கோவை அருகே கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணம் சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆனந்தன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரேமலதா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரேமலதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பிரேமலதா சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னைஇ உயர் நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, இது தொடர்பாக பிரேமலதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கெளடா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்h நேற்று விசாரணை நடத்தினர். அப்போது பிரேமலதா மீதான பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, மனுதாரார் சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகி முறையிட அறிவுறுத்துகிறோம் என கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications