குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி தங்கியிருந்த பெங்களூர் விடுதியில் தமிழக போலீஸ் விசாரணை

சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி பெங்களூர் ஒயிட்ஃபீல்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தவர் ஜனவரியில் தான் முதல் மாத சம்பளத்தை வாங்கினார். அதன் பிறகு தற்போது தான் அவர் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் குண்டூருக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பினார்.
ஆனால் அவர் ஊர் போய் சேர்வதற்குள் குண்டுவெடிப்பில் பலியாகிவிட்டார்.
இந்நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசார் ஸ்வாதி தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவர் எப்பொழுது அங்கிருந்து கிளம்பினார், எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறினார் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். அதன் பின்னர் தமிழக அதிகாரிகள் பெங்களூர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஸ்வாதி சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications