எங்க விவசாயிகள் இனி சிறுநீர் குடித்துதான் உயிர் வாழ வேண்டுமா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
டெல்லியில் தமிழக விவசாயிகள் சிறுநீர் குடித்து போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 40வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சி நிவாரணம் மற்றும் தமிழக விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் டெல்லியில் போராடி வருகின்றனர். உச்சக்கட்டமாக இன்று சிறுநீர் குடித்து போராடினர்.
நெட்டிசன்கள்
மோடி ஐயா எங்களுக்கு தண்ணீர்தான் தரலை இனி சிறுநீர் குடித்துதான் நாங்கள் உயிர்வாழ வேண்டும் என்று பேசினார் அய்யாக்கண்ணு. இதனையும் கூட இது உண்மையான சிறுநீர்தானா என்று கேட்டு கிண்டலடித்தவர்களை போட்டு கிண்டி எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
வெட்கப்படுகிறோம்
விவசாயிகளின் சிறுநீர் குடிக்கும் போராட்டம் வெட்கப்பட வேண்டிய விசயம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
ஒரிஜினலா?
அவங்க குடிச்சது ஒரிஜினல் சிறுநீர் இல்லைன்னு ஒருத்தன் டுவிட்டிருக்கான்...ஒரு மடக்கு வாங்கிக் குடித்திருப்பானோ? என்று கோபத்தை பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
இன்னும் எத்தனை போராட்டம்
எலி பாம்பு உன்னும் போராட்டம் மண்சோறு உன்னும் போராட்டம் நிர்வாண போராட்டம் இன்று சிறுநீர் குடிக்கும்போராட்டம் விவசாயிகள் இல்லன ஒன்னும் இல்ல என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.