ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பன்வாரிலால் புரோஹித் டெல்லி பயணம்
இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி : ஜனாதிபதி தலைமையிலான ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். மேலும், தூத்துக்குடி சம்பவம் குறித்து அறிக்கையை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநரின் இந்தப் பயணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications