காவிரி போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளும், மாணவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Governor meets PM Narendra Modi

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி போராட்டம், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

இவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்ய நேற்றிரவு தனி விமானம் மூலம் ஆளுநர் புரோஹித் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில் தற்போது பிரதமரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார் ஆளுநர்.

அப்போது காவிரி தொடர்பாக நிச்சயம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+