மக்கள் நல பணியாளர்களுக்கு வேலை வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு!!
டெல்லி: பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் வந்த அதிமுக அரசு இவர்களை நீக்கியது.

இதை எதிர்த்து நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அண்மையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த முறையீட்டு மனு தமிழக அரசு, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவழங்குவதில் எந்த உபயோகமும் இல்லை.
எனவே சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications