ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. வனத்துறை அதிகாரி தகவல்
செம்மரக் கடத்தலுக்கு இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர் என்று ஆந்திர வன பாதுகாப்பாளர் மூர்த்தி கூறியுள்ளார். இதற்கு மூளையாக செயல்படுபவர்களை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
கடப்பா: யாரோ செய்யும் குற்றத்திற்கு செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர் என்று வனத்துரை அதிகாரி மூர்த்தி கவலை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஒண்டிபேண்ட்டா அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 கார்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்பிலான 280 செம்மரக் கட்டைகள், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 8 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வனப் பகுதிக்குள் செம்மரம் வெட்டச் சென்றிருந்தது தெரியவந்தது.

தமிழக தொழிலாளர்கள் கைது
இதைத்தொடர்ந்து, போலீஸாரும், வனத் துறை ஊழியர்களும் இணைந்து வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, காசிபேட்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டு வனச் சரக அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

விசாரணை
பிடிபட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் பொதட்டூரில் வன பாதுகாப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.

இளைஞர்கள் பலிகடா
அப்போது, செம்மரம் கடத்தலை தடுக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்று கூறிய அதிகாரி, கடத்தலுக்கு மூளையாக செயல்படுபவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட 177 தமிழர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே இந்த 177 பேரின் நிலை என்ன என்பது தெரியவரும்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications