கர்நாடகா பொய் சொல்கிறது.. 15,000 கன அடி நீரை அது விடுவிக்கவில்லை.. தமிழக அரசு புகார் #TNNeedsKaveri
டெல்லி: தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடி நீரை விடுவித்திருப்பதாக கர்நாடகம் கூறியதில் உண்மை இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விடவில்லை என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சசி சேகருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி. ராம்மோகன் ராவ் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி கர்நாடக அரதசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதாக அது கூறியது தவறு. அந்த அளவுக்கு தண்ணீர் பிலிகுண்டுலுவில் பதிவாகவில்லை.
கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கர்நாடக அரசு கர்நாடகத்திலிருந்து பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் வீதம் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை கர்நாடக அரசு கடைப்பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு தண்ணீரை அது விடுவிக்கவில்லை.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப் படி, 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 100.670 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 35.91 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. 64.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்கவில்லை.
தனது பல்வேறு கால்வாய்கள் மூலமாக தனது அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு தனது பாசனத்திற்குப் பயன்படுத்தி வருகிறது கர்நாடகா. மேலும் செப்டம்பர் 9ம் தேதி நிலவரப்படி தனது நான்கு முக்கிய அணைகளிலிருந்தும் 30 டிஎம்சி தண்ணீர் வரை எடுத்து பயன்படுத்தியுள்ளது என்றும் ராம் மோகன் ராவ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications