நாளை நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் மீண்டும் சுங்க கட்டணம் செலுத்தணும்!
டெல்லி: நாளை நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மக்கள் செலவுக்கு கையில் பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார்கள். ஏடிஎம்களில் பெரும்பாலானவற்றில் பணம் இல்லை. இதற்கிடையே நவம்பர் 11ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு முதலில் தெரிவித்தது.
பின்னர் நவம்பர் 24ம் தேதி வரை அந்த சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 2ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாளை நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications